Sunday, March 01, 2009

தமிழீழத்தின் அநேகமான பெண்களில் ஒருத்தி..!

நான்
ஐவருக்கு மாலையிடவில்லை;
ஆனாலும்
துகிலுரியப்பட்டேன்.
எங்களூரின்
மஹாயுத்தத்தின் பின்னால்
என்னைப் போல்
நிறையத் திரௌபதைகள்,
சபதங்கள் நிறைவேற்றவென்று
காத்திருக்கிறார்கள்.
ஆனால்
எங்கள் தர்மர்கள்
மீண்டும் ஒரு முறை....
துரியோதனனின் பகடை
மயக்கத்தில்....!
எதிரணியில் ...
துரோணர்களூம் , பீஷ்மர்களும்
அங்கில்லை...
கர்ணனும் , அஸ்வத்தாமனும்
வரவில்லை...
வெறும்
எட்டப்பனும், சகுனிகளும்
தான்
கைகேகியின் கட்டளைகளுடன்...!

(இது எழுதப்பட்ட நாள் மார்கழி 18 2001).