Sunday, March 01, 2009

போதுமென்றா துயின்றாய்?

போதுமென்றா துயின்றாய்?
போதுமென்றா துயின்றாய்?
போதுமென்றா துயின்றாய்?- மரணமே
போதுமென்றா துயி்ன்றாய்? (மகனே!)

***************
உன் சாதி சனமிங்கு நாயிலுமீனமாய்
சாவது கண்டு மனந் துவண்டு மரணமே
போதுமென்றா துயின்றாய்? - மகனே!
போதுமென்றா துயினிறாய்?

********
வீதிகளில் தமிழச்சிகள் மானமிங்கு
வீணர்களால் துகிலுரிவதை
பாவியுயிர் தரித்துப் பார்த்திருபேனோ
சீயென்று மனம் கனன்று
கேவியழ ஆண்மை மறுத்து களத்தில்
உயிர் துறத்தல் மிகச் சிறப்பென்று..
நெஞ்சில் தாய் நானிருந்தும் -மகனே
மரணமே போதுமென்றா துயின்றாய்?
********
உயிர் தூசு சுமந்த தேகம் வெற்றில்
மாசு மறுவாய் கனத்ததுவோ?
பயிர் மேய்ந்த வேலி தனைக் கண்டு
கூசி யுள்ளம் உடைந்ததோ?
தளிர் பாலர் பலுரும் போரில் தமை
வீசி உயிர் கொடுத்தும்
போர் வேறு திசை சென்றதில்- மகனே
மரணமே போதுமென்றா துயின்றாய்?

No comments: