Sunday, March 01, 2009

கரும் புலி

உன்
மரண வீட்டில்
இறுதி மரியாதைக்கு
பூத உடல் இல்லை,
அந்திரேட்டிக்கு மட்டும்
அள்ளித் தந்தனர்
உன் சாம்பலை...!

சண்டை போடும் சமரில்
நம்பிக்கையில்லை,
உனக்கு!
சாவை மட்டும் தான்
நம்பிப் போகிறாய்
சமரென்று!

உன் கல்லறையில்
புதைத்து வைக்க
ஒரு எலும்ம்புத் துண்டாவது
கிடைக்குமா?
இரு;
பூவா தலையா
போட்டுப் பார்க்கிறேன்..!

1 comment:

முல்லை அமுதன் said...

nallakavithai.
vaazhthukkal.
mullaiamuthan.
http://kaatruveli-ithazh.blogspot.com/