Sunday, March 01, 2009

இப்படியே..!

சுதந்திரத்திற்கான தவமொன்றில்
இங்கு
மரணித்தல் வரம்;
மண் சுமந்த மேனிகளை
இங்கு
மண் சுமக்கிறது.
நிதானிக்கின்ற நேரங்கள் கூட
எதிரிகளுக்கு அவகாசம்...
ஒரு வகையில்;
இடை வேளைகள் வைக்காமல்
தொடர்கின்ற போராட்டங்கள்
தொடக்கி வைக்கின்ற
முனைப்புகள் நிறைத்து
உணர்வுகள் சுண்டி விட்ட
எலும்புக் கூடுகளில் உயிர்கள் வைத்து,
எழுந்து நிற்கிறது;
எந் நேரமும் ...
எதற்காகவும்..
தயாராகி...வரிசை..
எங்கள் எல்லைகள் நிரப்பி...!

1 comment:

முல்லை அமுதன் said...

nalla kavithai.
paaraaddukal.
mullaiamuthan.
ttp://kaatruveli-ithazh.blogspot.com/