Sunday, March 01, 2009

திருப்பள்ளியெழுச்சி!

பொழுது புலர்ந்தது; யான் செய்த பாவத்தால்
துன்பவிருட் கணம் சேர்ந்தன யாவும்.
கொடுந் துயர் தீ யெனப் பரவியெங் கணும்
சூழ்ந்து பரவியது அடிமைத் தளர்;
தொழுதுனை இரஞ்சி யிங்கே வரம் கேட்டிங்கு
தமிழன்னையுன் காலடியில் நிற்கிறேன்
மூடத்துயில் கொள்கின்றனையென் மகவே -சோதித்
திருவிழி திறந்தொரு பள்ளியெழுந்தருளாயே!

புள்ளினம் பறந்தன என் தேசத்தி லாங்கஅன்றொரு
காலம் புரவிகள் மேய்ந்தன புல் வெளிகள்
மெல்லனவே யென் காதுகளில ப்போதியைந்திட
மேள தாளங்களி சைத்தன இணந்தொடு
பன்னெடுங் காலங்களாய் மகனே- ஈங்கந்தப்
பரவசங்க ளெனக்கில்லை துயரன்றி
செல்லடிகளால் செவிடனுமானாயோ நீ,
சிந்தகளின்றி யுன் செயல் திறன் மறந்தனையோ
நன் முத்தே நவ மணியே நன்கு விழித்தெழுவாய்,
உன் நாடு மீளவே யொரு பள்ளியெழுந்தருளாயே

No comments: