மக்கள்
நாங்கள் வித்தியாசமானவர்கள்
அப்போதும்.........இப்போதுமாய்
இரண்டு நிலை வேறுபாடுகளிலும்.
பேசத் தெரிந்தவர்களாயிருந்தோம்
பேசத் தெரிந்தவர்களிடம்
ஏமாந்திருந்தோம்
ஏமாறத் தெரிந்தவர்களை
ஏமாற்றியிருந்தோம்...
நாங்கள் தமிழர்கள்!
ஒரு காலத்தில்...
எங்களுக்கும் காதல் பருவங்கள்
முக்கியத்துவமாயிருந்தன...
காத்திருத்தலும்...கைவிடப்படலுமாய்....!
அப்போதெல்லாம்.
காதலர்களுக்கு ஓடிப் போகவென்று
நிறைய தேசப் பரப்பிருந்தது...!
அல்லாமல்
காதலுக்காக
தற்கொலை செய்யவென்று
"பொலிடோல்" விற்க
நிறையக் கடைகளுமிருந்தன...!
இன்றும்
நாங்கள் ஓடுகின்றோம்.
விஷங்களை விழுங்குகின்றோம்.
வேறுபட்ட நிலைப்பாடுகளில்
வித்தியாசப் பட்ட பிரஜைகளாய்!
உறைக்கவில்லை ஒரு காலத்தில்
தேசத்தின் சொந்தப் பிரஜைகள்
அடிமைப்படுத்தலுக்குள்
அடங்கிப் போனது!
கனமான இடி முழக்கங்களோடு
புது வகையில் மின்ன்னல் பாய்ச்சி.....
எங்களுக்குள்
உணர்வு மழை பெய்ய
நிறையக் காலங்களெடுத்தது!
1 comment:
nalla kavithai.
karpanailazhaku therikirathu.kavithai thesam paarthu nirpathu melum azhaku.
mullaiamuthan
Post a Comment