Saturday, December 29, 2007

விடிவெள்ளிக்கு ஒரு வாழ்த்து!

விடியலை பார்த்திருந்தோம்...
விடி வெள்ளியாக வேங்கை வந்தான்!
கொடியவர் கையில் குலையுண்டோம்..
தமிழீழக் கொடியுடன்
தானைத் தலைவன் வந்தான்!

செந்நீருடன் கண்ணீரும் சிவப்பாய்
உப்பளங்களாய் உள்ளங்களும் வெடித்து
சிதறிய தசை முண்டங்களாய்
தமிழினம் தெருவில் சிதைய
பந்தாடிய கொடியவர் தலைகளை
கொத்தாக கொய்து போட
எங்கள் குல வீரன் வந்தான்!

மறவன் இனம் மாறாது குணம்
தீயும் காற்றும் சேர்ந்த வீரம்
சீறும் புலியின் பாயும் வேகம்
சிங்களமே நடுங்கும் தீரம்..
பேரம் பேசி முடக்க நினைத்தார்
ஒரு பேடியா இவன் அடங்கிப் போக..?
கோரம் காட்டி குதற முனந்தார்
ஒரு கோழையோ ஒதுங்கிப் போக?
நீசம் செய்த இனம் நடுங்க
நேசன் நிமிர்ந்து வந்தான்
விஸ்வரூம பொங்க...
பேசப் பேச இனியது தமிழ்..
இவனால்
இன்று உலகையே பேச வைத்தது
தமிழ்!

கூனிக் குறுகி இரோம் -இனி
இவன் கையில் கொடுத்தோம் எமை
கூடியொரு நாள் நாமும்
கும்மி கொட்டுவோம் எம் மண்ணில்
வீரன் பெற்ற விடுதலையை
குரவை கூட்டி பண்ணிசையில்..

அந்த நாளும் வாராதோ?
அக்கணம் வரை என்னுயிர் தரியாதோ?
சிந்திய என் சோதரர் குருதியின் ஈடாய்
எம் தேசத்தின் தலைவன் தரும் ஈழம்
இன்பமாய் ஒரு கணம் நுகர
அந்த நாளும் வாரதோ?
அக் கணம் வரை என்னுயிர் தரியாதோ?


*************************

எம் தாய்மண்ணின் மானம் காக்க களம் நடத்தும்
நம் தானைத் தலைவனுக்கு
என் மனம் குவிந்த , மனம் குளிர்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை
சமர்ப்பிக்கும் முகமாக 26.11.2007ல் எழுதப்பட்டது.

No comments: