Saturday, April 28, 2007

தமிழீழப் பெருமை

தமிழீழப் பெருமை
மா கடல் வலம் சூழ் கொள வங்கோர்
வரி சங்கொப்ப வோர் நேர் தீவு
சூல் கொண்டிங்குற்று நல் சுயம்பு
கடல் வரி வெட்டி தனி யொத்த
கோல் கொண்டோச்சிய முத்தமிழ் செல்வம்
தட வரியிங்குண்டாம் தனியி
லோர் தழலிங்கு வோர்போதில் பற்றிய கதையாம்
பகருமவர் நவமணிப் பரலீது காணீர்
*************
பால் முலயூற்றிய கையொடு மகவு வாயில்
தமிழ் முலையூட்டிய தாய் வளர்ப்பில்
சீலொடு செம்மையுற சேர் வளம் கொழிக்க
ஏரொடு வேரும் பல் தொழில் சிறந்து
மாலொடும் பிரானும் மனையாட்சி செய்த
மண்ணின் மகிமை கொணர்ந்து
சொற்பாவொடு பாரெங்கும் பரந்து விரி
புகழ்கேளீரிந்த வைடூரியப் பரலீது காண்.
*************
மூவர் வாய் பண்ணிற் கருவாய்
முத்தமிழ் சேர் முடிஹ்ரக் கனியாய்
போவோர் வந்தோர் வணிகக் கரையாய்
போதொடு நெல் சுமந்த மண்ணாய்
வீரர் படையும் விவேகம் கண்ட பண்டிதமும்
நேரொடு நெடுகிய சரிதங்களவைதனை
நீளூரைக்க வோரங்கம் போதிலையென்ன
சோர்விலசொல்ல கோமேதகப்பரலீது தான் காண்!
*************
செங்களனி நாற்று சேற்றில் புதையவெம்
தீற்றிய செம்மண் திட்டியினீராரம்
பரண் நிரப்பிய தங்கம் தகதகத்த நெல்மணி
வங்கம் வரை விரிந்த வயலொடு
பொங்கு தமிழ் மணம் சிறக்கவங்கெலாம்
பொழு தொன்றும் சோர்விலா
செங்கையறு சீரொடு சிறப்பும் சொல
பாங்கினிய பாடும் பவளப் பரலீது காண்
*************
கரை தட்டிய நுரையெலாமங்கு மகரம்
வரை கட்டிய நீரிலுப்பு விளைய
திரையலை கீழாழம் நுகர்ந்து மூச்சடக்கிக்கொணர்
தோராயமாய் குவியல்களில் முத்து
வ்ரிசங்கு வல மிடம் புரியொடு
பரண் நிரப்பிய பவளமொடு செல்வம்
தரை புரண்டோடிய தங்கத் தமிழ் திரு நாடாம்
புகழ் பாடும் முத்துப் பரலீது காண்!
*************
சென்றிரவு இருள் லொரு பொழுது கழியுறு முன்
செம்படவர் வலை சுமந்தேகும்
பாங்கில்வெண்ணிலவு முகில் போர்வையில் முயங்க
பனிதுகளி குளிர்காய்ந்தொழுகு மோர்
அங்கிலக்கில் ஆரவாரமா ஏலேலோக்களொலியில்
செங்கொண்டைச் சேவலும் துயிலெழும்
சங்கதியிங்கு சாங்கியமானதொரு சரிதமென
பாங்கினிலினிய பாடிடும் மாணிக்கப் பரலிது காண்!
*************
மூச்சடைத்து முயங்கி முக்குளித்த மூவாயிரத்தி
லோர் சிப்பியில் முத்தெடுத்தொத்த
சொல்லெடுத்து கோர்த்த கருவுரு கொடுக்க
மையெடுத்துப் போதிலையென்று மருகி
கடல் நீலம் கண்டெடுத்தும் காணான்
களித்திலையெனில் விண்ணேகி தான்
கருமுகில் சாறெடுத்து வந்து சாற்றிய
தமிழீழப் பெருமையாய் வைரத்துப் பரலீது காண்!
*************

1 comment:

முல்லை அமுதன் said...

thalaivan varukaiyil mendum thulirkkum vasantham.
ivan,
mullaiamuthan.